கவிதை by Delux
Posted in February of 2022
இறைவனின் அருளோடும்,
தாய் தந்தையரின்
ஆசீரோடும்,
சான்றோர்களின்
போற்றுதலுடனும்,
KOB – 87 அச்சாணி
எங்கள் நண்பண்
பாலசுந்தரின் தவப்புதல்வனுக்கு
விழாமேடை மணவிழா மேடை!!!
மணமேடை அலங்கரிக்கும்.
மணமகன் சிவசங்கர்
என்கிற ரிஷி!!!
மணமகள் தீட்சண்யா!!!
அன்பு நிறை அப்பா
பாலசுந்தர்க்கும்,
அன்பு வழிகாட்டி அம்மா
சித்ராவிற்கும், அன்பு மகனாய் அவதரித்த
சிவசங்கர் என்ற ரிஷி,
அறிவுசார் வழி போற்றி,
பட்டப் படிப்பு முடித்து,
அப்பாவுடன் கைகோர்த்து
பிஸினஸில் அச்சாரமாய் இருந்து,
போற்றருங் குணம்
கொண்ட அன்பு மகனாய் சாதித்து
பெயரிலே தீபத்தை
கொண்டு, வாழ்க்கை
தீபம் ஏற்ற வரும்
தீட்சண்யாவை கரம்
பிடித்து,
வாழ்க்கை நடை துவங்க
வாழ்வின் படிகள்
ஒவ்வொன்றும்
வெற்றி வெற்றியாய்
அணிவகுக்க,
கூடும் சொந்தமும்,
தோழமையும் வாழ்த்த
புதுவாழ்க்கை பொலிவோடு அமைய,
பெற்ற மனசிரண்டும்
குளிர,
பார்க்கும் நெஞ்சங்கள்
மகிழ,
வாழ்த்து மலர்களை தூவி,
வாழ்க பல்லாண்டு
பேரன்புடனும்,
பெருமகிழ்வுடனும்,
வாழ்த்தி,
ஆலம் விழுதாய் குலம் தழைத்து,
வளம் நளம் வாழ்வினில் வசமாகி,
ஊர் போற்ற,உறவு போற்ற,
அன்பு மிகுந்து,
அக்கறை நயந்து,
பண்பில் கனிந்து,
பாசத்தில் இணைந்து,
பாருலகம் வியந்து
போற்றிப் புகழ்ந்திட,
வாழ்க பல்லாண்டு
என வாழ்த்தும்
அன்பு உள்ளங்கள்,
KOB 87
